"பனிக்குடம் உடைந்து வயிற்றுக்குள் இறந்து போன ஆண் குழந்தை“ - துக்கம் தாங்காமல் கதறிய தாய்

x

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் - புவனேஸ்வரி தம்பதியினருக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆன நிலையில், தலைப் பிரசவத்திற்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்களிடம் தெரிவித்தும் அலட்சியத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு மீண்டும் அதிக வலி ஏற்படவே, அவசரமாக மருத்துவர்கள் குழந்தையை வெளியில் எடுத்தனர். அப்போது, பனிக்குடம் உடைந்ததால் ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால் குடும்பத்தினர் சோகமடைந்தனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியமே, குழந்தை இறந்ததற்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்