டெல்லி முதல்வருக்கு செக்..நோட்டீஸ் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை..

x

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் புதுப்பிக்கப்பட்ட விவகாரத்தில், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தனது இல்லத்தை மேம்படுத்த 44.7 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் 7 பேருக்கு டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், முதல்வரின் தேவைக்கேற்ப இல்லம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தப் பணிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், முதல்வரின் குடியிருப்பு வளாகம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்