மின்னல் வேகத்தில் வந்த ஆந்திர முதல்வர் கார்.. குறுக்கே பாய்ந்த பெண்கள்.. தூக்கி வீசிய போலீஸ் - அதிர்ச்சி காட்சி

x

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சென்ற கான்வாயை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது. சிங்கனமலா தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு புட்டபர்த்தி நோக்கி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காரில் சென்று கொண்டிருந்தார். அனந்தபூர் மாவட்டத்திற்கு வந்தபோது, முதலமைச்சரின் கான்வாயை தடுத்து நிறுத்தி பெண்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்திற்காக 210 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திவிட்டு, இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்