பெண் சடலத்தை நடுரோட்டில் விட்டு சென்ற ஆம்புலன்ஸ்.. உறவினர்கள் போர்வை கட்டி தூக்கிச்சென்ற அவலம்

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, சாலை வசதி இல்லாததால், இறந்த பெண்ணின் சடலத்தை, ஆம்புலன்ஸ் வாகனம் பாதி வழியிலேயே இறக்கி விட்டுச் சென்றது.

ஜவ்வாதுமலை பகுதிக்குட்பட்ட எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர், உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, எலந்தம்பட்டு கிராமம் நோக்கி வந்த போது, சாலை வசதி இல்லாததால், கோட்டை மலை அடிவாரத்திலேயே இறக்கி விடப்பட்டது. எலந்தம்பட்டு கிராமத்துக்கு ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பதால், போர்வையால் டோலி அமைத்து உடலை தூக்கிச் சென்றது மலைவாழ் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, சாலை வசதி, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்