களைகட்டிய எருது விடும் விழா.. அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த காளைகள் - ரூ 1. லட்சம் பரிசை தட்டி சென்ற காளை

x

ராணிப்பேட்டை மாவட்டம் மாங்குப்பம் கிராமத்தில் 44ஆம் ஆண்டு எருது விடும் விழா களைகட்டியது.

மருத்துவ குழுவின் பரிசோதனைக்கு பிறகு 500க்கும் மேலான காளைகள் களம்கண்டன.

மாங்குப்பம் கிராமமக்கள் சீறி பாய்ந்த காளைகளை பார்த்து ரசித்தனர்.

குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்த காளைக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன.

எருது விடும் விழாவில் மொத்தம் 16 பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்