கோலாகலமாக தொடங்கியது 20-ஆவது சர்வதேச திரைப்பட விழா... அமைச்சர் சாமிநாதன் தொடக்கி வைத்தார்

x

20-ஆவது சர்வதேச திரைப்பட விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கில் நேற்றிரவு தொடங்கியது.

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழவை தொடக்கி வைத்தார்.

இதில், நடிகை பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், 51 நாடுகளை சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

தமிழ்ப் பிரிவில், ஆதார், இரவின் நிழல், மாமனிதன், கார்கி உள்பட 12 படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்த விழாவுக்கு தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்