தந்தி டிவி செய்தி எதிரொலி-உடனே தூர்வாரப்பட்ட பொற்றாமரை குளம்

x

தந்தி டிவி செய்தி எதிரொலியாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளம் தற்போது பரபரப்பாய் தூர்வாரப்பட்டு வருகிறது. மகாமக குளத்தில் தண்ணீர் இருக்கும் நிலையில், பொற்றாமரை குளத்தில் தண்ணீர் இல்லாமல் புல் புதர்களாக மண்டிக் கிடந்தது. இது குறித்த செய்தி 2 வாரங்களுக்கு முன்பு தந்தி டிவியில் ஒளிபரப்பானது. இந்நிலையில், பக்தர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க பொற்றாமரைக் குளத்தில் டிராக்டரை கிரேன் மூலம் இறக்கி உள்ளே உள்ள புற்களை சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்