தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (03.12.2022)

x

மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும்...

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

"நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மடிக்கணினி வழங்கி, மென்பொருள் திறன் பயிற்சியும் தொடங்கி வைப்பு...

"மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அமைத்து தர வல்லுனர் குழு...

வீட்டில் இருந்தே பணியாற்றும் திட்டம் துவக்கி வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...

தமிழகம் முழுவதும் மலர் சந்தைகளில் பூக்கள் விலை கடும் உயர்வு...

பனிப்பொழிவால் வரத்து குறைந்த நிலையில், விலை உயர்வு என தகவல்...

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் தொடர் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் சாமந்தி பூக்கள்...

மொட்டு மலரும் தருணத்தில் பூக்கள் அழிவதால் விவசாயிகள் கண்ணீர்...

மருந்து தெளித்தும் நோயின் வீரியம் குறையாத‌தால், அறுவடைக்கு முன்பே மண்ணோடு மண்ணாக உழவு செய்யும் அவலம்

கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள 23 செங்கற்சூளைகளில் ஆய்வு நடத்தியதாக அறிக்கை தாக்கல் செய்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம்...

மற்ற சூளைகள் பற்றிய எந்த விவரங்களையும் தெரிவிக்காதது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...

முழுமையான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை...



Next Story

மேலும் செய்திகள்