தஞ்சை மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம் - கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்

x

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வீற்றிருக்கும் மகா நந்திக்கு, பிரதோஷ வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மஞ்சள், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதற்கிடையில் மழை பெய்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் நனைந்தவாறு பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளும் மழையில் நனைந்தவாறு, தஞ்சை பெரிய கோயிலின் கட்டிடக்கலையை ரசித்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்