சிறுக பணம் கட்டி சேர்த்த நகை 'அது எல்லாமே திருடு போச்சி..' - பிரபல நகைக்கடை பேச்சில் அதிர்ந்த மக்கள்

x
  • தஞ்சாவூரில் வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் நகைகளை மோசடி செய்த புகாரில், பிரபல நகைக்கடையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
  • தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் பொதுமக்கள் பலர் நகைகளை அடமானம் வைத்தும், பணத்தை முதலீடு செய்தும் வந்துள்ளனர்.
  • இதில், அடமானம் வைத்த நகைகளை சிலர் மீட்க சென்ற போது, கடையில் இருந்த நகைகளை ஊழியர்கள் திருடிவிட்டதாக கூறிய தகவல் பகுதி முழுவதும் பரவி பரபரப்பானது.
  • இதில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளிகளில் உள்ள நகைக்கடையின் கிளை நிறுவனங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
  • இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், நான்கு நகைக்கடைகளை பூட்டி போலீசார் சீல் வைத்தனர்.
  • இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி சீல் வைக்கப்பட்ட நகைக்கடைகளில் ஆவணங்கள் மற்றும் நகைகள் குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்