ஒரே நாளில் நான்கு பேர் நான்கு சதம்.. T20 போல் ஆன டெஸ்ட் மேட்ச் - பாக்.கை கதறவிட்ட இங்கிலாந்து அணி

x

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் போட்டியின் முதல் நாளில் 500 ரன்களுக்கு மேல் குவித்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.

ராவல்பிண்டியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, டி20 ஆட்டத்தில் விளையாடுவது போன்று ருத்ரதாண்டவம் ஆடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாக் கிரவுலி(ZAK CRAWLEY), பென் டக்கட் அதிரடியாக விளையாடி சதமடித்தனர்.

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய போப், ஹாரி புரூக் ஆகியோரும் சதம் விளாசினர்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக முதல் நாள் ஆட்டத்திலேயே நான்கு வீரர்கள் சதமடித்த பெருமை இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது.

நால்வரின் சதத்தால் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்