டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி... கில்லி போல் எகிறி அடித்த ஆஸி. - சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய அணி வீரர்கள்

x

லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணி

ஃபாலோ ஆனை தவிர்க்க போராடி வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்பு களமிறங்கிய ஜடேஜா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை 318 ரன்கள் பின்தங்கியுள்ளதால், ஃபாலோ ஆனை தவிர்க்க இந்தியா போராடி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்