வீட்டில் கேட்ட பயங்கர அலறல் சத்தம்- கணவன் மனைவிக்கு நிகழ்த்திய கொடூரம்

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அலங்காரம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் - பச்சையம்மாள் தம்பதி. இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆகும் நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷின் மனைவி பச்சையம்மாள் அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கள்ளத்தொடர்பை துண்டிக்காத மனைவியின் மீது ஆத்திரமடைந்த சுரேஷ் , அவரை கத்தியால் குத்தி கொலை செய்து, காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்