நடுக்கடலில் 41 பேருடன் சென்ற படகு திடீரென தண்ணீரில் மூழ்கிய பயங்கர காட்சிகள்

x

கம்போடியா அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சி வெளியாகியுள்ளது. ப்ரே சிகானோக் அருகே 41 சீனர்களுடன் இருந்த மீன்பிடி படகு ஒன்று தீடீரென கடலில் மூழ்கியது. அப்போது, படகில் இருந்தவர்களை மற்ற படகில் இருந்தவர்கள் 21 பேரை மீட்டனர். படகு முழுமையாக மூழ்கியதால் 20 பேர் மூழ்கினர். அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 19 சீன மாயமாகியுள்ளதாக சீன தூத‌ரகம் தெரிவித்துள்ளது. சீனாவின் குவாங்சூவில் இருந்து அவர்களை அழைத்துச் சென்ற கம்போடியா நோக்கி சென்ற போது கவிழ்ந்த‌து தெரிய வந்துள்ளது. படகு கவிழும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்