பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து.. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்-திருப்பூர் அருகே பயங்கரம்

x

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையின் வெளியே நூல் தயாரிப்பதற்கான மூலப்பொருளான கழிவு பஞ்சை பல அடுக்குகளாக அடுக்கி வைத்துள்ளனர். இதில் திடீரென தீப்பற்றிய நிலையில், மளமளவென தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவுப்பஞ்சுகள் மற்றும் பஞ்சு மூலப்பொருள்கள் தீயில் கருகி சேதமானது...


Next Story

மேலும் செய்திகள்