தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து - அப்படியே கவிழ்ந்த பேருந்து | உயிர் தப்பிய 24 பேர்

x

திருச்சி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

திருப்பதியிலிருந்து மதுரைக்குச் சென்ற தனியார் பேருந்து, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 24 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்