விசிக கொடி கம்பத்தால் தொடரும் பதட்டம் - குள்ளஞ்சாவடி அருகே போலீஸ் குவிப்பு

x

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் பா.ம.க. எதிர்ப்புக்கு மத்தியில், விசிக வைத்த கொடி கம்பத்தால் பதற்றம் தொடர்ந்து வருகிறது. போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், என்.எல்.சி விவகாரம் தொடர்பாக கருத்து கேட்க வந்த பாமக எம்.எல்.ஏ.க்களிடம் அக்கட்சியினர் கொடிக் கம்ப பிரச்சினையை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பதில் அளித்துள்ள எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, பிரச்சினையை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துச் செல்கிறோம் என்றும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கட்சி தலைமை முடிவு எடுக்கும், அதுவரையில் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்