வளமும் பொருளும் தரும் வைகாசி விசாகம்.முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால்

x

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முதன்முறையாக சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பால் வீணாக்கப்படாமல் குழாய் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தனியார் நிறுவனம் ஒன்று கோயில் நிர்வாகத்துடன் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாலை பைப் மூலம் மீண்டும் பக்தர்களுக்கே வழங்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த முயற்சி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்