சாமி கும்பிடுவதில் தகராறு.. “பால்குடம் எடுக்க கூடாது“.. அதிரடியாக குவிக்கப்பட்ட போலீசார் - தென்காசியில் பரபரப்பு

x
  • பிள்ளையார்குளம் கிராமத்தில் வட பத்திரகாளியம்மன் கோயிலில், ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
  • இதனை தொடர்ந்து இரண்டு தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், ஒரு தரப்பினர் குடமுழுக்கு நடத்தவும் சாமி கும்பிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
  • இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி குடமுழுக்கு விழா நடைபெற்ற நிலையில், மற்றொரு பிரிவினர், சாமி கும்பிட காவல்துறையினரிடம் அனுமதி வாங்கியுள்ளனர்.
  • ஆனால் பால்குடம் எடுத்து செல்ல கூடாது என காவல்துறையினர் கூறியும், சிலர் அதனை எடுத்து சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
  • தகராறையடுத்து மாவட்ட எஸ்.பி.சாம்சங் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்