எஸ்.ஐ.யை தாக்கிய ராணுவ வீரர் உட்பட 4 பேரை தரதரவென இழுத்து சென்ற காட்சி - தென்காசியில் பரபரப்பு

x
  • சங்கரன்கோவில் அருகே மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீர‌ர் உட்பட 4 பேர், காவல்துறையினரும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் உள்ள ஓட்டலில் மது போதையில் ராணுவ வீரர் முத்துப்பாண்டியும் அவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து சாப்பிடச் சென்றுள்ளார்.
  • அப்போது, ஆம்லெட் சரியில்லை எனக்கூறி நாற்காலிகளை உடைத்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
  • தகவலறிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீசார் சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, 4 பேரும் சேர்ந்து காவலர்களை தாக்கி புரட்டி அடித்த‌தாக கூறப்படுகிறது.
  • இதையடுத்து, கூடுதல் காவலர்கள் வரவழைத்து, 4 பேரையும் கைது செய்தனர்.
  • 4 பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • காயமடைந்த எஸ்.ஐ. மற்றும் காவலர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • காவலர்களை ராணுவ வீர‌ர் உட்பட 4 பேர் தாக்கியது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்