"உள்ளாடையுடன் ஏன் அடிச்சீங்க?" போலீஸிடம் வாக்குவாதம் செய்த ராணுவ வீரர்.. காவல் நிலையத்தில் பரபரப்பு - வெளியான வீடியோ

x
  • சங்கரன்கோவில் அருகே மது போதையில் ராணுவ வீரர் ஒருவர், காவல் நிலையத்தில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
  • சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில், சில தினங்களுக்கு முன்பு ராணுவ வீரர் முத்துப்பாண்டி உட்பட 4 பேர், ஆம்லெட் சரியில்லை எனக்கூறி ரகளையில் ஈடுபட்டனர்.
  • அவர்களை சமரசம் செய்ய சென்ற காவலர்களையும் தாக்கியதாக கூறப்பட்டதால், ராணுவ வீர‌ர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • இந்நிலையில், மதுபோதையில் காவல் நிலையம் சென்ற மற்றொரு ராணுவ வீர‌ர் அமல்ராஜ், ராணுவ வீர‌ர் முத்துப்பாண்டியை ஏன் உள்ளாடையுடன் அடித்தீர்கள் எனக்கூறி வாக்குவாத‌த்தில் ஈடுபட்டார்.
  • உறவினர்களை வரவழைத்து அனுப்பிய போதும், வாக்குவாத்த்தில் ஈடுபட்டதால், அமல்ராஜை கைது செய்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
  • தற்போது வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்