2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்..! - தென்காசி அருகே அதிர்ச்சி

x
  • தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வீட்டில் வைத்திருந்த பணம் காமாணமல் போனது
  • தொடர்பாக மனைவி மகேஸ்வரியிடம் சண்டை போட்டதாகவும், இதனால் அப்பெண் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
  • இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த மகேஸ்வரி தனது 2 பெண் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இச்சம்பவத்தில் தீக்காயமடைந்த ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்