தென்காசி: காதல் திருமணத்தால் பேச மறுத்த தந்தை.. தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட பெண்.. காப்பாற்ற சென்ற கணவனுக்கும்...

x
  • கடையநல்லூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், தந்தை பேச மறுத்த காரணத்தால் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே குமந்தாபுரத்தை சேர்ந் கணேசன் என்பவரும், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கௌசல்யா என்பவரும், 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
  • அவர்களது திருமணத்தை ஏற்காத கௌசல்யாவின் தந்தை, பேசாமல் இருந்து வந்துள்ளார்.
  • இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த தந்தையிடம், செல்போனில் பேச கௌசல்யா முயன்றுள்ளார்.
  • ஆனால், அவர் பேச மறுத்த‌தால், மன வருத்த‌த்தில் இருந்த கௌசல்யா, கடந்த 8ஆம் தேதி தன்னைத்தானே தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
  • அவரை காப்பாற்ற முயன்ற கணேசனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
  • அவர்களை மீட்ட உறவினர்கள், மருத்துவனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கௌசல்யா உயிரிழந்தார்.
  • தந்தை பேச மறுத்த‌தால் மகள் தற்கொலை செய்துகொண்ட‌து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்