சட்ட விரோதமாக மின்சார வேலி அமைத்த விவசாயி... மின்வேலியில் தாமே தடுக்கி விழுந்து சிக்கிய பரிதாபம்... காப்பாற்ற சென்றவருக்கு நேர்ந்த சோகம்

x
  • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வயல்வெளியில் மின் வேலியில் சிக்கிய விவசாயியை காப்பாற்ற சென்ற மற்றொரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
  • தென்காசி மாவட்டம் அருணாசலபுரத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ் என்பவர் தமது வயலுக்கு, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார்.
  • இரவில் மின் இணைப்பை கொடுத்து விட்டு காலையில் மின் இணைப்பை துண்டிப்பது வழக்கமாக வைத்துள்ளார்.
  • இந்நிலையில், மின் இணைப்பை துண்டிக்க சென்ற விவசாயி கனகராஜ், கால் தடுமாறி மின்வேலியில் சிக்கியுள்ளார்.
  • அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வயலில் விவசாய பணி செய்து கொண்டிருந்த மற்றொரு விவசாயி முத்துராஜ் என்பவர், காப்பாற்றும் நோக்கில் வந்த போது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.
  • தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் கனகராஜை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • ஆலங்குளம் போலீசார் முத்துராஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • விவசாயி மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்