மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் தற்காலிக நிறுத்தம் - தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

x

மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ், தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை எளிமைப்படுத்துவதாலும், தொழில்நுட்ப மாற்றங்கள் செய்து வருவதாலும் தகுதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முறை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15-ஆம் தேதிக்கு பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்