கோவிலில் புகுந்து ஐம்பொன் சிலை திருட்டு - போலீசார் தீவிர விசாரணை

x

பட்டுக்கோட்டை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேற்குடிக்காடு கிராமத்தில் இரண்டரை அடி கொண்ட ஐம்பொன் சிலை திருடு போயுள்ளது.

இச்சிலையின் மதிப்பு 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பான புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்