4 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் - 3 பேர் கைது - தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு

x

4 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் - 3 பேர் கைது - தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆளுங்கட்சியான டி ஆர் எஸ் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவினர் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமயச்சழு சாமியார், ராமச்சந்திரா , நந்தகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர் . பின்னர் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி , லஞ்சம் கொடுத்தற்கான ஆதாரம் இல்லை என்பதால் மூவரையும் விடுவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்