"என்னை போய் குற்றவாளியை விட்டுவிட்டேன் சொல்ராங்க...நியாயமா?"...ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல்

x

சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலை கடத்தல் கும்பலின் தலைவனான சுபாஷ் கபூர், தீனதயாளன் உள்ளிட்டோரை விட்டுவிட்டேன் என என் மீது அவதூறு பரப்பப்படுவதாக தெரிவித்தார்.

சி.பி.ஐ எங்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக தவறான தகவல் பரவுகிறது என்றும், சிலை கடத்தல் வழக்கில் பல போராட்டங்களை கடந்து அவர்களை கைது செய்தது நான் தான் எனும் போது இப்படி சொல்வது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

813 சிலைகளை அவர்களிடம் இருந்து மீட்டு அவர்கள் சாம்ராஜ்யத்தை இழுத்து மூடினோம என கூறிய பொன் மாணிக்கவேல், இன்று சிலைகள் மீட்கப்பட்டு வருவதற்கு நாங்கள் அன்று செய்த வேலைகளே காரணம் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்