அடுத்தடுத்து 2 தோல்விகளுக்கு பின் மாஸ் கம்பேக் கொடுத்த இந்தியா..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
x

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில், தென்னாப்பிரிக்க அணி, 2க்கு1 என முன்னிலை வகித்த நிலையில் ராஜ்கோட்டில் 4 ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. பின்னர், 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால், 87 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தென்னாப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2க்கு 2 என சமநிலையில் உள்ளன.இப்போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்