டார்ச் லைட் அடித்து நூதன முறையில் ஆசிரியர்கள் போராட்டம்

x

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு டார்ச் லைட் அடித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது குறித்தும் ஜாக்டோ ஜியோ சார்பில் வலியுறுத்தப்பட்டது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியை உடனடியாக விடுக்க வேண்டும் என கோரி, செல்போனில் டார்ச் லைட் அடித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்