Ford தொழிற்சாலையை வாங்கும் டாடா - மறைமலை நகர் தொழிற்சாலையின் நிலை?

x

குஜராத்தில் அமைந்துள்ள Ford மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் கார் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

1995ல் சென்னை அருகே மறைமலை நகரில் கார் உற்பத்தியை தொடங்கிய Ford மோட்டார்ஸ், 2014இல் குஜராத்தின் ஸானந்தில் இரண்டாவது தொழிற்சாலையை உருவாக்கியது.

இந்நிலையில், ஸானந்த்தில் உள்ள கார் தொழிற்சாலையை 726 கோடி ரூபாய்க்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ஸானந்த் தொழிற்சாலையின் ஆண்டு உற்பத்தி திறன் 3 லட்சம் கார்களாக உள்ள நிலையில், அதை 4 லட்சமாக உயர்த்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது.மறைமலை நகரில் உள்ள மூடப்பட்ட Ford மோட்டார்ஸ் தொழிற்சாலையை விற்க முயற்சிகள் தொடர்வதாக தகவல்கள் கூறுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்