எத்தனால் ஏற்றி வந்த டேங்கர் லாரி... திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்து

x

நாமக்கல் மாவட்டம் பச்சாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், 40 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் மூலப்பொருளான எத்தனாலை ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

கர்நாடக மாநிலம் வெல்கம் மாவட்டத்தில் இருந்து லாரி ஒன்று எளிதில் தீப்பிடிக்க கூடிய எத்தனாலை, சுமார் 40 ஆயிரம் லிட்டர் ஏற்றிக்கொண்டு, கோவை நோக்கி வந்துள்ளது.

அப்போது, பச்சாம்பாளையம் பகுதியில் எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், லாரி தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்த நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்