திடீரென போராட்டத்தில் குதித்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள்

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே டேங்கர் லாரி ஓட்டுநர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

நாரப்பன்சாவடி பகுதியில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிலையத்தில் இருந்து, நாள்தோறும் 400க்கும் மேற்பட்ட லாரிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு எரிபொருள் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், தனியார் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் டேங்கர் லாரிகளில் எரிபொருள் நிரப்ப தாமதிப்பதாக கூறி, அதன் ஓட்டுநர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்


Next Story

மேலும் செய்திகள்