தஞ்சைப் பெரிய கோவில் இந்திரன் சிலை மாயமா...? - சிலை தடுப்பு பிரிவினர் அதிரடி ஆய்வு

x

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில், ராஜராஜன் நுழைவு வாயிலில் இருந்த இந்திரன் கற்சிலை மாயமாகியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். கோவில் பணியாளர்கள், சிவச்சாரியார்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்திரன் சிலை தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், அதன் பிறகே சிலை குறித்த தகவல்கள் முழுமையாக தெரியவரும் எனவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்