மேம்பாலத்தில் பயங்கரம்.. பைக் மேலே.. இளைஞர் கீழே - தலைசிதறி இறந்த கோர காட்சிகள்

x

தஞ்சை பெரிய கோயில் மேம்பாலத்தில் பைக்கில் வந்த இளைஞர் பாலத் தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கரந்தை செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த இளஞ்செழியன் என்ற 26 வயது இளைஞர் மருத்துவக்கல்லூரி சாலையில் தஞ்சையை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பெரிய கோவில் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் உள்ள தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இளஞ்செழியன் பாலத்தின் கீழே அணுகு சாலையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்