முகத்தை சிதைத்து இளைஞர் படுகொலை! சரமாரியாக வெட்டி வீசிய மர்மநபர்கள் - தஞ்சையில் பரபரப்பு

x

தஞ்சையில், இளைஞர் முகம் சிதைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்த பிரதீப் என்பவர், தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அவரை அழைத்துள்ளனர். பின்னர், வெளியே வந்த பிரதீப்பை, மறைத்து வைத்து இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் மர்மநபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைநை்த பிரதீப், சம்பவ இடத்திலேயே பலியானார். எனினும் ஆத்திரம் அடங்காத அந்தக் கும்பல், தாங்கள் வைத்து இருந்த ஆயுதங்களால் அவருடைய முகத்தை, உருவமே தெரியாத அளவுக்கு சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர். தகவலின் பேரில் வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்