அசுர வேகத்தில் பறந்து வந்து பெண் மீது மோதிய மணல் லாரி - கடைகளை இடித்து நொறுக்கிய அதிர்ச்சி காட்சி

x

தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி ஜெராக்ஸ் கடைக்குள் புகுந்ததில், ஒரு பெண் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி மணல் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுக்கடை பகுதியில் சென்ற போது, லாரியின் ஸ்டியரிங் உடைந்ததால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். இதனால், சாலையில் சென்றவர்கள் மீது மோதிய லாரி, சாலையோரம் இருந்த ஜெராக்ஸ் மற்றும் நகை அடகு கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் வீரமணி உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்