தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிரான வழக்கு... மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

x
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக பதிலளிக்க ஆளுநரின் செயலருக்கு உத்தரவிட வேண்டும் என தெலங்கானா அரசு சார்பில் வாதிடப்பட்டது.
  • இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், ரிட் மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்