தேடி தேடி வேட்டையாடும் தமிழக விஜிலென்ஸ்.. ஒரே பொறியில் சிக்கிய 3 அரசு அதிகாரிகள்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்த உயிஸ் ரகுமான்கான் என்பவர், தடையில்லா சான்று பெற வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவர்களின் ஆலோசனைப்படி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் 3 அதிகாரிகளிடம், ரசாயனம் தடவிய 30 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்