"மகளிருக்கு வாய்ப்பளிக்காத, எந்த ஒரு நாடும் வளர்ந்தது இல்லை" - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

x
  • ஒரு நாடோ சமுதாயமோ முன்னேற வேண்டும் என்றால் அங்குள்ள மகளிர் முன்னேற வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
  • சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எண்ணித் துணிக என்ற தலைப்பின் தமிழகத்தின் பெண் ஆளுமைகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுனர் ஆர்.என்.ரவி, ஒரு நாடோ சமுதாயமோ முன்னேற வேண்டும் என்றால் அங்குள்ள மகளிர் முன்னேற வேண்டும் என்றார்.
  • 2010ஆம் ஆண்டிற்கு பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி. குறிப்பிட்டார்.
  • மகளிருக்கு வாய்ப்பளிக்காத, மகளிரை பின் தள்ள கூடிய எந்த ஒரு நாடும் சமுதாயமும் வளர்ந்தது இல்லை என ஆளுநர் ரவி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்