தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி | coronavirus

x

கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண்மணிக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால், கடந்த மாதம் 30ம் தேதி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.

இதேபோல், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த மாதம் 23-ந் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த வடவள்ளியை சேர்ந்த பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம், நாள்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாகவும், திருப்பூர் அனுப்பர்பாளையம் மூதாட்டிக்கு பக்கவாத நோய் பாதிப்பு இருந்ததாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்