அடுத்த 48 மணி நேரத்தில்..."தமிழகத்தை நோக்கி நகரும் சுழற்சி - இடி, மழை, சூறாவளி? | Tamilnadu | Rain

x

"அடுத்த 48 மணி நேரத்தில்..."தமிழகத்தை நோக்கி நகரும் சுழற்சி - இடி, மழை, சூறாவளி? | Tamilnadu | Rain

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அது, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் கடலோரப் பகுதிகளில், அநேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, நகரின் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு, தமிழக கடலோர பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்