தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா... மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா... மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்
x


சிவகங்கை அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய உடை அணிந்து மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்தார்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகியம்மன் கோயிலில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

வெளிநாடுகளை சேர்ந்த 60 சுற்றுலா பயணிகள் பங்கேற்ற விழாவில், பல்வேறு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனிடையே வேஷ்டி, சட்டை அணிந்து விழாவில் பங்கேற்ற ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாட்டு வண்டி ஓட்டி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.




Next Story

மேலும் செய்திகள்