அதிரடியாக உயர்ந்த அபராதம்... வாகன ஓட்டிகளே உஷார்..! போலீசார் தீவிர கண்காணிப்பு

x

நள்ளிரவு அமலுக்கு வந்த புதிய சட்டம் - போலீசார் தீவிர வாகன தணிக்கை

சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராத தொகை உயர்வு இன்று முதல் அமல்

சென்னை மாநகரின் பல இடங்களில் போலீசார் தீவிர வாகன தணிக்கை

இனி 46 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளன

உரிய ஆவணமின்றி வாகனம் ஓட்டினால் அபராத கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.5,000ஆக வசூல்

தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம்

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ.1000 அபராதம் /சரக்கு வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் ரூ.20,000 அபராதம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபர்களுடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிப்பு

பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள அபராதத்தால் போக்குவரத்து விதிமீறல் குறையும் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்