பிரதமர் மோடியிடம் தமிழக அமைச்சர் வைத்த கோரிக்கை | Pm Modi | Minister | kkssrramachandran

x

பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான தேசிய அளவிலான மூன்றாவது அமர்வு கூட்டத்தை டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு நிவாரணம் மற்றும் தற்காலிக மறுசீரமைப்பின் ஒரு பகுதியை மட்டுமே செயல்படுத்த முடிவதாக கூறினார். மீட்பு மற்றும் புனரமைப்பு நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் 15 வது நிதிக் குழு, மீட்பு மற்றும் புனரமைப்புக்கான தனி நிதித் தலைப்பை உருவாக்க பரிந்துரைந்துள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்