தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் போராட்டம் வாபஸ்

x

சென்னையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர், தங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சென்னை சேப்பாக்கத்தில் 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வந்தனர். அவர்களை அமைச்சர் கீதா ஜீவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் கீதாஜீவன் 15 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், மீதமுள்ள 5 கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்குவதாக சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் உண்ணாவிரத போராட்டம் 32 மணி நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது. தங்கள் கோரிக்கைகளை ஒரு மாதத்தில் நிறைவேற்றவில்லை என்றால், போராட்டத்தை அறிவிப்போம் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்