"வருகிற 23ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம்

x

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வருகிற 23ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,

வருகிற 21ம் தேதி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,..

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

--


Next Story

மேலும் செய்திகள்