உதகை காவல் நிலையத்தில் தமிழக டிஜிபி திடீர் ஆய்வு

x

உதகையில் காவல் நிலையத்துக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுடன் பிஞ்சுக் குழந்தைகள் ஆர்வத்துடன் உரையாடினர். உதகைக்கு திடீர் ஆய்வு மேற்கொள்ள வந்த அவர், காவல் நிலையத்தில், புகார் அளிக்க வரும் மக்களுக்கான வழிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா, காவலர்களுக்கான தேவைகள் என்னவென்று கேட்டறிந்தார். பின்னர் காவல் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 3 சிறுமிகள், டிஜிபி சைலேந்திர பாபுவுடன் உரையாடினர். தங்களிடம் டிஜிபி உரையாடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், வருங்காலத்தில் போலீஸ் ஆகப் போவதாகவும் அந்த சிறுமிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்