தமிழ் பட தயாரிப்பாளரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் | Producer arrest

x

மைனா திரைப்பட தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மைனா, சாட்டை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்தவர் ஜான் மேக்ஸ். இவர் மோகன வேல் என்பவரிடம் 9 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு, வேப்பம்பட்டில் உள்ள தனது நிலத்திற்கு பொது அதிகாரம் வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மோகனவேலுக்கு தெரியாமல் அதனை ரத்து செய்துவிட்டு, வேறோரு நபருக்கு பொது அதிகாரம் வழங்கி நிலத்தை விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் பொது அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதை அறிந்த மோகனவேல், பணத்தை திரும்ப கேட்டதாகவும், ஜான் மேக்ஸ் பணத்தை வழங்காமல் அலைக்கழித்து வந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து மோகன வேல் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மத்திய குற்ற பிரிவு போலீசார், ஜான் மேக்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்