சென்டர் மீடியனில் சொருகிய தாம்பரம் பஸ்.. பயணிகளோடு நள்ளிரவில் நடந்த பயங்கரம்

x

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில், சாலை நடுவே இருந்த தடுப்பில் அரசு பேருந்து மோதியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நேற்று நள்ளிரவு காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து, வாலாஜாபாத் பகுதியில் சென்றபோது, சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஓட்டுநரும், நடத்துநரும் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்